கவிதை எழுதச் சொன்னாய்
கருணை வடிவான உன் அழகு முகத்தை
கண்ட அந்த நாளுக்கு பின்னோக்கி சென்றேன்...
கருமேகங்களாய் சூழ்ந்திருந்த
என் வாழ்க்கையில்
மழைச்சாரலாய் வந்தாய்!
துன்பத்தை துதிக்கவும்
மறக்க வைத்து
இன்பத்தில் மூழ்கடித்தாய்!
தரிசு நிலமாய் இருந்த என் மனதில்
அன்பென்னும் விதையூன்றி
நன்செய்யாய் மாற்றினாய்!
முகபாவனைகளால்
முன்னில் நிற்பவர்களை
மூழ்கடித்தாய்!
சிலிர்த்துப் போனேன்...
நீ செல்லப் பெயரில் அழைப்பதை
செவிமடுக்கும் வேளையில்!
கைபேசி உரையாடல்
மணிக்கணக்காய்
நமக்கே அறியாமல்!
உன் மொழி கேளாமல்
24மணி நேரம் கடந்தால்
அது கதிரவன் மேற்கே உதிக்கும் காலமே!
திரும்பிப் பார்த்தேன்
என் வாழ்க்கையை
நம் நிகழ்வுகளே இனிமையாய்...
என்னில் சரிபாதியாய்
என் வாழ்வின்
கீதமானாய்!
நட்சத்திரங்களாய் பலர் இருக்க
முழு நிலவாய் என் வானில்
நீ மட்டுமே!
பிரிய முடியா உறவு நீ
என்னில் பிரிக்க இயலா
உயிர் நீ!
என் அன்புத் தோழி!!!
கருணை வடிவான உன் அழகு முகத்தை
கண்ட அந்த நாளுக்கு பின்னோக்கி சென்றேன்...
கருமேகங்களாய் சூழ்ந்திருந்த
என் வாழ்க்கையில்
மழைச்சாரலாய் வந்தாய்!
துன்பத்தை துதிக்கவும்
மறக்க வைத்து
இன்பத்தில் மூழ்கடித்தாய்!
தரிசு நிலமாய் இருந்த என் மனதில்
அன்பென்னும் விதையூன்றி
நன்செய்யாய் மாற்றினாய்!
முகபாவனைகளால்
முன்னில் நிற்பவர்களை
மூழ்கடித்தாய்!
சிலிர்த்துப் போனேன்...
நீ செல்லப் பெயரில் அழைப்பதை
செவிமடுக்கும் வேளையில்!
கைபேசி உரையாடல்
மணிக்கணக்காய்
நமக்கே அறியாமல்!
உன் மொழி கேளாமல்
24மணி நேரம் கடந்தால்
அது கதிரவன் மேற்கே உதிக்கும் காலமே!
திரும்பிப் பார்த்தேன்
என் வாழ்க்கையை
நம் நிகழ்வுகளே இனிமையாய்...
என்னில் சரிபாதியாய்
என் வாழ்வின்
கீதமானாய்!
நட்சத்திரங்களாய் பலர் இருக்க
முழு நிலவாய் என் வானில்
நீ மட்டுமே!
பிரிய முடியா உறவு நீ
என்னில் பிரிக்க இயலா
உயிர் நீ!
என் அன்புத் தோழி!!!
😍😍😍😍😍😍😇😇😇😇😇
ReplyDeleteநன்றி
ReplyDelete